இறைத்தூதர் இப்ராகிம் நபியின் அவர்களின் தியாகத்தினை நினைவு கூறும் தியாக திருநாளான ஹஜ் பெருநாளினை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் இன்று (10) கொண்டாடினர். இந்த ஹஜ் திருநாளினை முன்னிட்டு ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசளில் விசேட பெருநாள் தொழுகை மௌலவி சாஜகான் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஹட்டன் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாபா செய்து கொண்டனர். குறித்த தொழுகையின் போது நாட்டிக்கும் நாட்டு மக்கள் சாந்தி சமாதானம் நிலவி நாடு வளம் பெற வேண்டும் என தூவா பிராத்தனையும் இடம்பெற்றன.
மலைவாஞ்ஞன்




