கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான இளைஞர் ஒருவரே தெரணியகல பகுதியில் வைத்து நேற்று(02) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை இன்றைய(03) தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.