இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 16 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கைக்கு மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி உறுதிப்படுத்தி இணக்கம் தெரிவிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இ.தொ.கா வேலைநிறுத்த போராட்டத்தை வாப்பஸ் பெற்றதோடு, தொழிற்சாலையில் இருந்து தேயிலையை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.