இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் – கருத்தரங்குகளுக்கு தடை

0
165

2022ம் கல்வியாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் தடையானது பரீட்சை முடியும் வரை அமுலில் இருக்குமென பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here