மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ஹட்டனில் நடைபெற்றது

0
196

மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டன் ஊளுஊ சி.ஸ்.சி.மண்டபத்தில் 18ஃ03ஃ2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திர்ரேக்கா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ‘ வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்’ ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்றினார். ‘தூரத்துப் பச்சை’ நாவலாசிரியராக மட்டுமே அறியப்பட்ட கோகிலம் சுப்பையாவின் அரசியல் – சமூக – இலக்கிய வாழ்க்கைக் குறித்த வகிபாகத்தையுத்தையும் விழா நடைபெற்ற  மண்டபத்தில் நிறைவேற்றப்பட்ட ஹட்டன் தீர்மானம் பற்றியும் வரலாற்று ரீதியான விளக்கங்களுடன் உரையாளர் பேராசிரியர். பஸீஹா அசிம் குறித்த
அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்கிவைத்தார் .

பேராசிரியர் பஸீஹா அசிம் மாவனல்லையை பிறபலபடமாக கொண்டவர் புவியியல் துறையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர் தனது முதுமாணி மற்றும் இரண்டு கலாநிதிப் பட்டங்களை நோர்வே நாட்டின் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்து அப்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுகிறார்.

வெளிநாட்டில் பணிப்பெணகளாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படக்கூடிய தனிப்பட்டஇ குடும்பஇ சமூகச் சவால்களை முறைசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக தனது கருத்துகளை முன்வைத்தார்.

உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தில் களத்தில் இந்த விடயதானத்தில் செயற்பாட்டாளர்களாக இயங்கும் பெண் செயற்பாட்டாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .

அத்தகைய பெண் செயற்பாட்டாளர்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட 14 பெண் செயற்பாட்டாளர்களை ‘மலையகப் பெண் சாதனையாளர்கள்’ கௌரவமும் புத்தகங்களும் வெகுமதியாக வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் அரங்கத்தின் தலைவி சந்திர்ரேக்கா மலர்ச்செண்டு வழங்கி அவர்களை வரவேற்க பேராசிரியர் பஸீஹா பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வைத்ததுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகர் புத்தகங்களை வெகுமதிகாளாக வழங்கி வைத்தார்.

பேராசிரியர் பஸீஹா அசிம் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக நினைவுச் சின்னத்துடன் சட்டவாளர் யோகேஸ்வரி விஜயபாலன் எழுதிய ‘நுனெடநளள ஐநெஙரயடவைல ‘ எனும் நூல் சிறப்புப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.

நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்கியதுடன் நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்தளித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here