தப்பியோடிய போதகர் வெளியிட்ட தகவல்

0
109

இலங்கையில் இருந்து தப்பியோடிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டகிராம் பதிவின் மூலம் இலங்கையர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.

இதன்படி தான் தற்போது தொழில் நிமித்தமாக பயணிப்பதாகவும் அது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தான் இலங்கை திரும்புவேன் என்றும், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் டோம் ஹோலுக்கு சிறப்பு பிராத்தனைக்கு காலை 10 மணிக்கு வருமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற மதங்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், சி.ஐ.டி., அவரிடம் விசாரணையை தொங்கியுள்ளது.

அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் தடை உத்தரவு பெற்றிருந்த போதிலும், அதற்கு முன்னதாகவே அவர் வெளிநாடு சென்றிருந்தார்.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here