வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்லத் தடை

0
144

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல்கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது என வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் பி.சி.எஸ். பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் பி.சி.எஸ். பெரேரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here