இறந்துபோன தன் பிள்ளையை வலுகட்டாயமாக கொண்டு சென்ற தந்தையால் நுவரெலியாவில் பரபரப்பு

0
106

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த 14 வயது பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டதாக தந்தைக்கு தெரிவித்தனர். நுவரெலியா வைத்தியசாலையில் இருந்து வலுக்கட்டாயமாக தனது இறந்து போன பிள்ளையை கொண்டு சென்ற தந்தை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தந்தை நுவரெலியா நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, தனது பிள்ளை திடீரென சுயநினைவை இழந்ததாக நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு பிள்ளையை அழைத்து வந்துள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த 14 வயது பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டதாக தந்தைக்கு தெரிவித்தனர்.

அப்போது அதை தாங்கி கொள்ள முடியாத தந்தை கோபத்தில் பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த தந்தை, “தனியார் மருத்துவமனைக்கு சென்று பிள்ளையை காப்பாற்றுகிறேன்” என்று கூறி பிள்ளையை பேரூந்தில் ஏற்றிச் சென்றதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குழந்தையை அழைத்துச் சென்ற பேருந்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here