திருமணத்துக்கு சென்ற 103 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

0
160

அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ள நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர்.

திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்த வேளை, அதிக எடை காரணமாக படகு திடிரென ஆற்றில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த படகில் பயணித்தவர்கள் தங்களது மோட்டர் சைக்கிளையும் எடுத்து வந்திருந்திருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அப்போது, இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தொடர்த்தும் தேடி வரும் பணிகளில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here