தந்தையுடன் விளையாட சென்ற சிறுமிக்கு நடந்த அவலம்!

0
235

தங்காலை – நெடோல்பிட்டிய பகுதியில் கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று காலை (18.06.2023) தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் ஊஞ்சல் ஆடச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இளைய பிள்ளை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here