மவுஸ்ஸாக்கலையில் நிர்மாணிக்கப்படும் சொகுசு ஹோட்டல் : அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

0
191

இந்த காணி இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது

01. சொகுசு ஹோட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல் எல் சீ நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகையின் அடிப்படையில் காணி வழங்கல்

சொகுசு ஹோட்டல் வளாகத்தை நிர்மாணிப்பதற்காக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்டிய ஒரு காணியையும் அதே நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுவனம் ஒன்றிற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.

அதன்படி, கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த திட்டத்திற்காக முழு நேரடி வெளிநாட்டு முதலீடாக பயன்படுத்தவுள்ளதுடன், அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவையும் சமர்ப்பித்துள்ளது.

இந்த காணி இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குறித்த காணியை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கான யோசனை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

02. சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஜோர்ஜியன் நாட்டு சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் அரச சட்டங்கள் தொடர்பான சட்ட அமைப்புக்களுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல்வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறு தகு காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டம்

ஈரவலயக் காணிகளுக்கு நிலவுகின்ற அதிக கேள்வி, காடுகள் அழிவடைதல், காடழிப்பு மற்றும் காணி மண்ணரிப்பு, துரித அபிவிருத்திச் செயன்முறைகள், படையெடுப்புத் தாவரங்களின் பரம்பல், நிலைபேறற்ற வகையிலான நிலப்பயன்பாடு மற்றும் விவசாய முறைகள், மழைவீழ்ச்சி மாற்றமடைதல் மற்றும் வெப்பமயமாதல் மற்றும் வரட்சியின் தாக்கங்கள் போன்ற காரணங்களால் குறித்த வலயத்தில் நிலவுகின்ற உயிர்ப்பல் வகைமை மற்றும் நீரேந்துப் பிரதேசங்கள் அழிவடைந்து போதள் , மண்ணின் உற்பத்தி இயலுமைக்கும் , தேயிலை, இறப்பர் போன்ற போகப் பயிர்கள் மற்றும் பல்பருவப் பயிர்களின் நிலைபேற்றுத்தன்மைக்கும் பெருமளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அதனால், தேயிலை, இறப்பர் காணிகளுக்கு அண்மையில் காணப்படுகின்ற உயரிய உயிர்ப்பல் வகைமையுடன் கூடிய சிறிய காடுகளைப் பாதுகாப்பதற்கும், நிலைபேறான காணி முகாமைத்துவத்திற்கும் சரியான படிமுறைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் இணைந்து அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல் வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறுதகு வகையான காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதியளிப்பு மூலம் 04 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம்உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை போன்ற ஆறு மாவட்டங்களில் அரச-தனியார் பங்குடமை மற்றும் சமூகப் பங்குடமை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உத்தேசக் கருத்திட்டத்திற்காக குறித்த நிதி வசதியளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப் பயிற்சி – 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்கல்

இலங்கை 1996.10.24 அன்று நீடித்த அணுப் பரிசோதனைத் தடைகளுக்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த உடன்படிக்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக 2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ஏதேனுமொரு நாட்டில் அணுப் பரிசோதனை அணு வெடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிலையப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தால் குறித்த உடன்படிக்கையின் IV ஆம் உறுப்புரைக்கமைய உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது.

அதற்கான செயற்பாடுகள் மற்றும் பணிகளை மேற்கொள்வதற்கும், பரிசோதனை உபகரணங்கள் பற்றிய பயிற்சியை வழங்குவதற்காகவும் ஒருங்கிணைந்த களப்பயிற்சி வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் இலங்கையின் தேசிய கேந்திர நிலையமாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் – 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேண்டுகோளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தகைமை மதிப்பீட்டுக்கமைய மாதுறுஓய தேசிய பூங்காவிற்கு அருகாமையிலுள்ள பிரதேசத்தில் குறித்த ஒருங்கிணைந்த களப்பயிற்சிகளை நடாத்துவது பொருத்தமான இடமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் – 2025 இற்கான வசதியளிப்புக்களை இலங்கை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

05. வெளிநாட்டவர்களிடமுள்ள இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளல்

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் 1970 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமைய, தற்போது காணப்படுகின்ற ஏதேனும்

அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையுண்டு.

அதற்கமைய, காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

நெதர்லாந்திடமிருக்கின்ற அவ்வாறான 06 தொல்பொருட்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட

ஆய்வுக் கருத்திட்டத்திற்கமைய, குறித்த தொல்பொருட்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்காகவும், தற்போது பல்வேறு நாடுகளில் 3 காணப்படுகின்ற இலங்கைக்குரிய தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப்

பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காகவும் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. உலகளாவிய காலநிலை பற்றிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக காலநிலைஇடர் நிலைக்கு ஆளாகின்ற நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள் ள நாடுகளில் “காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை” உருவாக்கல்

உலகளாவிய காலநிலை பற்றிய உரையாடலில் காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகளுக்குத் தாக்கம் செலுத்துகின்ற தீர்மானம்மிக்க சில துறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றதுடன், நட்டங்கள் மற்றும் இழப்பீட்டு நிதியமொன்றை தாபித்தல் பற்றி கடந்த காலநிலை பற்றிய உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பல் வேறு காரணங்களால், குறித்த நிதியத்தைத் தாபிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலநிலை ரீதியாக இடருக்குள்ளாகின்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அதன் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் அவற்றைத் தழுவிக் கொள்வதற்கான தலையி டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தீர்வு முன்மொழிவுகளின் அவசியமான பகுதியாக, குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ‘கடனுக்கான நீதியையும்’ உள்ளீர்த்துக் கொள்வது பொருத்தமென்பதே இலங்கையின் கருத்தாகும். அதற்கமைய, குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. Sutech Sugar Industries (தனியார்) நிறுவனம் (கிறீன் ஃபீல்ட் சீனி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு) நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் காணி வழங்கல்

தாய்லாந்தின் Sutech Sugar Industries கம்பனியால் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வவுனியாவில் கரும்பு பயிரிடலை மேற்கொள்வதற்காகவும், சீனி உற்பத்தி தொடர்பான கருத்திட்ட முன்மொழிவொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் இலங்கையின் சீனி தேவையின் 20% (120,000 மெட்றிக்தொன் சீனி) உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கருத்திட்டத்திற்கான தொழிற்சாலை வளாகம் மற்றும் வசதிகளுக்காக, வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பற்றைக்காடுகளைக் கொண்ட வவுனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்ரெயார் காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த காணித்துண்டை உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்குவதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களம் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலிட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. மத சுதந்திரத்தை இல்லாது செய்தல் மற்றும் மதம்சார் விடயங்களை திரிபுபடுத்தல்

மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மதத்தத்துவப் போதனைகளை இழிவுபடுத்தலைத் தடுப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது.

அதற்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அதுபற்றிய விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவம் போன்ற பிரதான மதங்களின் வணக்கத்தலைவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், உடகங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுதல்

சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் வரியை அறிவிடுதல், சூதாட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் ஆட்களுக்கும் சமூகத்திற்கும் இடம்பெறுகின்ற தீயவிளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளுக்காக அனைத்து சூதாட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற ஏற்புடைய வகையில் 6 சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எனும் பெயரிலான ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள் கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here