எதிர்காலத்தில் 10 புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான யோசனை ஜனாதிபதியால் முன்வைப்பு

0
156

கல்விக்கடன் வசதியின் கீழ் உயர் கல்வியை பெறுவதற்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் இலங்கையில் 10 பல்கலைக்கழகங்கள் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி சீவலி மத்திய பாடசாலை மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கல்விக்கடன் வசதியின் கீழ் உயர் கல்வியை பெறுவதற்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை திட்டமிட விரும்பும் வகையில் பாடத்தை தேர்வு மேற்கொள்ளும் வகையில் கல்வித்துறை சீர்திருத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற கல்விமுறையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வெளிநாடுகள், நிபுணர்கள் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துகள் பெறப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here