ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிச்சுற்று போட்டி: ரசிகர்களுக்கு முக்கிய தகவல்

0
113

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்குகான நுழைவு சீட்டுகள் தொடர்பில் ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவித்தலை வழங்கியுள்ளது.

இறுதி சுற்றுக்காக இந்திய அணி ஏற்கனவே தெரிவாகிய நிலையில் நேற்று (14) இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் 02 விக்கட்டுக்களால் இலங்கை வெற்றியைப் பதிவு செய்து இறுதி சுற்றுக்கு தெரிவாகியது.

இதற்கமைய நாளை ஞாயிற்றுகிழமை (17) நடைபெறும் இறுதிப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான பல நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் C, D மேல் மற்றும் கீழ் பிரிவுகளில் உள்ள அனைத்து நுழைவுச்சீட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், A மேல் மற்றும் கீழ், பிரிவு, B மேல் மற்றும் கீழ், மற்றும் பிரதான அரங்கத்தில் நுழைவுச்சீட்டு மட்டுமே வாங்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் இரசிகர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here