நுவரெலியா – மாகஸ்தோட்ட பகுதியில் நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், மாகஸ்தோட்ட – விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் குடிபோதையில் இருந்ததாகவும், பணி முடிந்து நேற்று இரவு மனைவி வீடு திரும்பியதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்போது, மனைவி ஆயுதமொன்றினால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்;ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதவான் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டி சந்ரு திவாகரன்