மனைவியின் மற்றுமொரு தொடர்பால் கணவன் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு ஸ்ரப்பி மின்னா தோட்டத்தில் இன்று காலை 20.20.2023 10.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் மனைவி மற்றுமொரு நபருடன் காதல் தொடர்பு கொண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளதனால் அதனை தாங்கி கொள்ள முடியாது குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்