ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிருந்து ஒரு பிள்ளையின் தந்தை சடலமாக மீட்பு

0
248

ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் (11) வந்துள்ள குறித்த நபர், மது அருந்திவிட்டு, பஸ்ஸில் சென்றுள்ளார். பஸ்ஸில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here