TikTok ஐ தடை செய்தது நேபாளம்

0
233

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மொன்டானாவில் தடைசெய்யப்பட்டது.உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறி நேபாளம் சீனாவில் உருவாக்கப்பட்ட சமூக ஊடக தளமான TikTok ஐ தடை செய்துள்ளது.

நாட்டில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தொடர்பு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்ற புதிய விதியை அந்நாடு அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட TikTok, ஆரம்பத்தில் இந்தியா உட்பட பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மொன்டானாவில் தடைசெய்யப்பட்டது.

மேலும் பிரித்தானிய பாராளுமன்றத்திலும் அதன் பயன்பாடு தடைசெய்யப்பட்டது. நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரேகா ஷர்மா, TikTok தளம் மோசமான உள்ளடக்கத்தை பரப்புகிறது என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும், இந்த தீர்மானத்தை அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here