இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 544,488 வாடிக்கையாளரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஒக்டோபர் இறுதிக்குள் மின்சார சபையின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6,998,068 ஆகவும், சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை இலட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வதாகவும் மின்சார சபை குறிப்பிடுகிறது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் 544,488 மின்சார விநியோகங்கள் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பு வழங்கப்படுவது ஒரு சாதாரண நிலையே என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.