நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு முன் மீண்டும் ஆர்ப்பாட்டம்! தொழிற்சங்கங்கள் அதிரடி

0
207

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தேசிய வைத்தியசாலையின் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்ய பொலிஸார் தற்போது முயற்சித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த பிரச்சினையில் பொலிஸார் தலையிட்டு சுகாதார துறை தலைவர்களை கைது செய்ய முற்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here