இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் வெங்காயம் கிலோ ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானினால் தமது ஏற்றுமதி பொருட்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெங்காய இறக்குமதி முடங்கியுள்ளது.
இந்த நிலையில், பெரிய வெங்காய விலையை சீராக பேண வேண்டுமாயின் இந்தியாவில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.