கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்,கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் சுமார் நான்கு மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.