ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு மலையக மக்கள் வாக்களிப்பார்கள்

0
85

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் “அத தெரண” இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்திடம் வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, தற்போதைக்கு குறித்த சம்பள உயர்வை வழங்க முடியாது என தெரிவித்தார்.

“ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையை மிக வேகமாக இழந்து வருகிறது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம். செலுத்த முடியாத ஒன்றை விரும்பினால், சட்டரீதியான பிரச்சினை ஏற்படும். முன்மொழிவு முற்றிலும் நேர்மாறானது. வர்த்தமானி வந்திருப்பது தெரியும். எதிர்கா“ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அதன்பின்னர் மலையக மக்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் நடைப்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு மலையக மக்கள் வாக்களிப்பார்கள். சஜித் பிரேமதாஸவின் தந்தையே எமக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தார். அதனை நாம் மறந்துவிட கூடாது. அதேபோலவே சஜித் பிரேமதாசவும் பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எனக்கு உறுதியளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் சிலர் உங்களிடம் சீமெந்து, அரிசி, பருப்பு போன்ற பொருள்களுடன் வந்து வாக்கு கேட்பார்கள். நீங்கள் யாரும் அவர்களுக்கு வாக்குகளை வழங்காதீர்கள். அரிசி, பருப்பு நமக்கு தேவையில்லை. நிலவுரிமையே எமக்கு வேண்டும். நான் அமைச்சராக இருந்தபொழுது 7 பேர்ச்சஸ் காணியை பெற்று அதில் வீடுகளை கட்டி கொடுத்தேன். அப்போது என்னை பலர் கிண்டல் செய்தார்கள். 10 பேர்ச்சஸ் அல்லது 20 பேர்ச்சஸ் காணி கேளுங்கள் என்று. ஆனால் மலையகத்தில் எத்தனையோ.

அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்கள் யாரும் நான் மலையகத்தில் செய்த சேவைகளை யாருமே செய்யவில்லை. 2015 முதல் 2019 வரை மலையகத்தில் பல்வேறு அபிவி ருத்தி திட்டங்களை முன்னெடுத்தவன் நான் என்பதை பெருமையாகக் கூறுவேன். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே உங்களது வாக்களிப்பீர்கள் என நம்புகின்றேன்.”- என்றார்.லத்தில் என்ன செய்யாலம் என்று பார்ப்போம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here