200 மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள்-கொலை களமாகிய நைஜர்

0
5

நைஜர் நாட்டின் பனிபாங்கோ என்ற பகுதியில் உள்ள இராணுவத் தளத்தை 200க்கும் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் தாக்கியதில் குறைந்தது 34 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகள்” என்று அமைச்சினால் விவரிக்கப்பட்ட தாக்குதல் நடத்தியவர்கள், மேற்கு நகரமான பனிபாங்கோவில் உள்ள தளத்தை கடந்த வியாழக்கிழமை தாக்கியுள்ளனர். இதில் 34 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 14 வீரர்கள் காயமடைந்தனர்.

இதேநேரம் இந்த தாக்குதலில் இராணுவ படைகள் “டஜன் கணக்கான பயங்கரவாதிகளை” கொன்றதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பனிபாங்கோ நகரத்தின் மீது கோழைத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் பலர் கொல்லப்பட்ட நிலையில் ஏனையோரை கண்டுபிடிப்பதற்காக பனிபங்கோவில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நைஜா், புா்கினா ஃபாசோ, மாலி ஆகிய நாடுகள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அல்-காய்தா,ஐ.எஸ் உள்ளிட்ட மத பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குழுக்களின் தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றன.

அண்மையில், இந்த மூன்று நாடுகளிலும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் படையினரை வெளியேற்றின.

ஆனால் இராணுவ ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here