அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஈரானின் அணுசக்தி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இன்று அதிகாலை நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த நடவடிக்கை, துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச சமூகம் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஆதரவளிக்கும்.
இந்த தேசிய தொழில்துறையின் வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பு சட்ட நடவடிக்கைகள் உட்பட ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.