நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நானு ஓயா உட ரதல்ல பகுதியில் உள்ள 07 குடும்பங்களைச் சேர்ந்த 35பேர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
கற்பாறைகள் சரியும் அபாயத்தினால் அவர்கள் நேற்றையத்தினம் (23) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியின் உயரமான மலையில் இருந்து தோட்ட வீடுகளுக்கு அருகிலுள்ள ஆட்டுத் தொழுவத்தின் மீது பாறை ஒன்று வெயிலிந்துள்ளது. இதனால் தொழுவத்தில் இருந்த இரண்டு ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்த அங்கிருந்த மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.