ஈரானில் தரைவழி தாக்குதல் திட்டத்தை தீட்டி வரும் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக் கின்றன. அதேநேரம் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய தளங்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படை கள், விமானங்கள் மூலமும் குண்டுவீசி வருகின்றன.இதில் அடுத்தகட்டமாக ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா திட் டமிட்டு உள்ளது. குறிப்பாக வீரர்களை ஈரானுக்குள் ஊடுருவ வைத்து அதன் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது.இதற்காக சுமார் 3,500 கூடுதல் வீரர்களை வளைகுடா பிராந்தியத்துக்கு அனுப்பி உள்ளது.




