ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

0
7
hindutamil

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் இந்த தொடரின் தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 37 ரன்கள் எடுத்தார். டர்விஷ் ரசூல் 26, ரஷீத் கான் 28, முகமது நபி 20 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அர்ஷ்தீப் 2 விக்கெட்டும், பும்ரா, அக்சர், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபிஷேக் சர்மா, 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், 22 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் இஷான் கிஷன், 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 11 மற்றும் திலக் வர்மா 15 ரன்கள் எடுத்தனர்.

14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் வரும் வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here