இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தாணிகர் அரிந்தம் பக்ஷி அவர்கள் விடைபெற்று செல்வதோடு ஷில்பக் என்.எம்புலே புதிய உதவி உயர்ஸ்தாணிகராக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அரிந்தம் பக்ஷிக்கான பிரியாவிடை நிகழ்வும் புதிய உதவி உயர்தானிகருக்கான வரவேற்பு நிகழ்வும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றுமு; சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இன்று (06-09-2018) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் செயலாளர், ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது அரந்தம் பக்ஷி அவர்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.