பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது 4 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 26 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதேபோல நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் மேலும் 8 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.




