நெத்தானியேல் செலாம்பி (Nathanael Selambi) என்ற 7 வயது சிறுவன், கடந்த புதன்கிழமை (கனடா தினம்) மதியம் 3 மணியளவில் பின்ப்ரூக் பாதுகாப்புப் பகுதியில் (Binbrook Conservation Area) திடீரென காணாமல் போயுள்ளான்.
இதனைத் தொடர்ந்து ப்பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) நீருக்கடியிலான தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மதியம் 1:30 மணியளவில் அச்சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இல்லை என ஹெமில்டன் பொலிஸார் (Hamilton Police Service) தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் இந்த திடீர் இழப்புக்கு ஹெமில்டன் மேயர் ஆண்ட்ரியா ஹார்வத் (Andrea Horwath) மற்றும் பல சமூகத் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேடுதல் பணியில் உதவிய பொதுமக்களுக்கும் அவசர உதவிப் பிரிவினருக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.




