தியத்தலாவையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

0
49
thamilan

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here