நுவரெலியாவில் கொல்லப்பட்டு தெல்தெனியவிற்கு கொண்டுவரப்பட்டதா – சடலம் குறித்து சந்தேகம்!

0
47
Malainaadu Media
தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிற்றூந்து ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த திங்கட்கிழமை தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் மரணம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் பெண்ணின் உடலத்தை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிற்றூந்தில் ஏற்றி, மறுநாள் அதிகாலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக, இருவரும் தங்கியிருந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் குறித்த பெண்ணை அறையிலிருந்து ஒருவர் தூக்கிச் சென்று சிற்றூந்தில் ஏற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நுவரெலியா தடயவியல் பிரிவினரின் உதவியுடன் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள், சிசிடிவி பதிவுகள், விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் தொலைபேசி அழைப்புத் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் சந்தேகநபரை அடையாளம் காணும் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணியை வெளிக்கொணரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here