நுவரெலியாவில் நீண்ட வரிசையில் மக்கள் – 60 நாட்களின் பின் லாப்கேஸ் சிலிண்டர் விநியோகம்.

0
189

நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப்கேஸ் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றதுபொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.

இரு மாதங்களுக்கு மேலாக லாப்கேஸ் எரிவாயு வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக இன்று (14) வினியோகம் இடம்பெற்றது.

லாப்கேஸ் எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 1150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த , கந்தபளை ,மாகஸ்தோட்டம் , நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட்டமையா சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மை நிலை ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here