அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா சங்கத்தின் தேரர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இந்தநிலையில், தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.