வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க வேண்டும். என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மகளீர் தின வாழ்த்து செய்தியிலேயே இவ்விடயத்தை சுட்டி காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புக்களால் முன்னெடுத்த போராட்டத்தை இன்று வரை மகளீர் தினமாக கொண்டாடுகின்றோம்.வெறும் வார்த்தைகளால் கொண்டாடாமல் உணர்வு பூர்வமாக மகளீர் தினத்தை கொண்டாட வேண்டும்.
என தன் வாழ்த்து செய்தியில் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.