குளவி கொட்டுக்கு இலக்காகிய 12பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதி .
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 14.02.2018 புதன் கிழமை காலை 10.30 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை மரம் ஒன்றில் இருந்த குளவி கலைந்து வந்து பெண்தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான 12பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்