கொத்மலை நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலால் வாகனங்கள் பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 25.02.2018 அன்று முதல் 3 நாட்களுக்கு இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியளாலர் தெரிவித்துள்ளார்.
அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனால் அணைகட்டின் மேல் பயணம் செய்வது மட்டுமல்லமால் நீர்தேக்கத்தை பார்வையிட வருவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்)