க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம் – மலையக மாணவர்கள் தயார்

0
77

க.பொ.த. உயர்தரப் பரீட்சை 04.01.2024 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.

மலையகத்திலும் 04.01.2024 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் புனதி கெப்ரியல் மகளிர் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here