இலங்கை விமானபடையின் 67 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சிவனொளிபாதமலையை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஇலங்கை விமானபடைத் தளபதி எயார் மார்சல் கபில் ஜயம்பதியின் பணிப்புரைக்கு அமைவாக விமானப்படை வீரர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நல்லத்தண்ணியிலிருந்து சிவனொளிபாதமலை வரை செல்லும் வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் குப்பைகளை சேகரித்தல் மற்றும் மின் கம்பங்களை திருத்தியமைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனர்
விமானப்படையினருடன் இணைந்து பொது மக்களும் சுத்திகரிப்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்