ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்!

0
135

வைத்தியத்துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு வைத்திய சேவைப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையைக் கருத்தில் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பஹா, புத்தளம், கேகாலை மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய வைத்தியசாலைகளிலும், கொழும்பு லேடி ரிஜ்வே, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, கொழும்பு சொய்ஷா, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய்ப் பிரிவு என்பனவற்றில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற மாட்டாது எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாட நேரமொன்றை ஒதுக்கித் தருமாறும் அச்சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here