நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0
58

நாட்டில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும்அபாயம்காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய,சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணியுமாறும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here