நுவரெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டம்: உதயகுமார் எம்பி பங்கேற்பு

0
63

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின்
விசேட கூட்டம் ஒன்று நேற்று நுவரெலியா மாநகர சபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இடம் பெற்ற
இந்தக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கலந்து கொண்டார்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கலந்து கொண்டார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க இயக்குநர் சந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் நுவரெலியா, ராகலை ,நானுஓயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் தோட்டக் கமிட்டி தலைவர்/தலைவிமார்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பான கருத்தாடல்களும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here