நுவரெலியா அக்கல பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

0
173

நுவரெலியா அக்கல பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது.

நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அக்கல பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச அதிரடிபடையினர் தெரிவித்தனர் .

22.02.2018. வியாழகிழமை இரவு 10மணி அளவில் குறித்த சந்தேக நபர் நுவரெலியா விசேடஅதிரடி படையினரால் கைது செய்யபட்டதாக மேலும் தெரிவித்தனர் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அக்கல பிரேதேசத்தில் மேற்கொண்ட சுற்றிலைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் குறித்த நபர் அக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு இன்றைய தினம் இந்த சந்தேக நபர் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

எஸ்.சதீஸ், டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here