நோட்டன் பகுதியில் கடும் மழை விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு.

0
72

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இலங்கை பல மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்து வருகிறது.நேற்று காலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடும் மழை பெய்ததுடன் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையே காணப்பட்டன.
இந் நிலையில் நேற்று முதலாம் திகதி நோட்டன் பகுதியில் பெய்வரும் கனத்த மழை காரணமாக நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேகத்திற்கான பொறுப்பான பொறியியலாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி,கெனியோன்,லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டடிய. மவுசாக்கலை, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளன எனவே எவ்வேளை வான் கதவுகள் தன்னிச்சியாக திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே நேரம் நீர்த்தேக்கங்களில் நீர் போதியளவில் கிடைக்கப்பெறுவதனால் நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் இடம்பெற்று வருவதாக மின்சார துறை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here