பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் தீ பரவியுள்ள நிலையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு மற்றும் ஏனைய வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அரச அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், அதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்ட செந்தில் தொண்டமான், சேதமடைந்த மக்களின் குடியிருப்புகளை மறுசீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.