பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது

0
78

டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.டீசலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த முடியாது எனவும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாயின் உடன்படிக்கைகளின் பிரகாரமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here