பூண்டுலோயாவில் ஆலயங்களின் புனர் நிர்மானத்திற்கு காசோலைகளை வழங்கி வைத்தார் மருதபாண்டி ராமேஸ்வரன்.

0
112

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கள் மற்றும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கையப்புகலை ,ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டங்களில் உள்ள ஆலயங்களின் புணர்நிர்மான பணிகளுக்கான நிதி வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இ.தொ.கா வின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் மூர்த்தி, கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பாரதிராஜா , மாவட்டத் தலைவர்கள் , தலைவர்கள் , இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள்,,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here