பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு மூவர் கைது; ஏழுபேர் தப்பி ஓட்டம்!

0
125

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் மாட்டுக்கு புல் அறுக்கும் வயற்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் மிகுதி ஏழுபேர் தப்பி விட்டதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 23.12.2017. சனிகிழமை இரவு 11மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் .

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது இவர்கள் கைது செய்யபட்டதாகவும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்க்கு பயன்படுத்த பட்ட உபகரனங்கலையும் மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம் பெற்று வருகின்ற இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் கெர்க்கஸ்வோல்ட் கிழ் பிரிவு தோட்டத்தில் இருந்து கெர்க்கஸ்வோல்ட் இல் 02 தமிழ் வித்தியாளயத்திற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்திய பிரதான வீதியானது இது போன்ற சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் குறித்த வீதியில் பாரிய குழிகள் கானபடுகின்றமையால் இந்த ழூடபட்ட நிலையில் கானபடுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ழூன்றுபேருக்கும் பொலிஸாரால் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 2018.01.02ம் திகதி அட்டன் நீதாவன் முன்னிலையில் அஜர்ராகுமாறு உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here