பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

0
276

பொகவந்தலா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா நகருக்கருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த ஆணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதனை கண்டு நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் மேலதிக விசாரணையினை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here