மகனை தடியால் தாக்கி கொலை செய்த தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் இருவரும் எதிர் வரும் 23ம் திகதி வரை விளக்கமறியிலில் .
பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தில் மகனை தடியால் தாக்கி கொலைசெய்த தந்தை மற்றும் மருமகன் ஆகிய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் 09.03.2018.வெள்ளிகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.
08.03.2018.வியாழக்கிழமை இரவு பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் மதுபோதையில் இருந்த மகனுக்கும் தந்தைக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் அது மோதலாக மாறி தந்தையும் மருமகனும் இனைந்து தடியால் தாக்கியமையால் குறித்த நபர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கொலை செய்யபட்டவர் 37வயதான ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை சம்பவம் தொடர்பில் மரண விசாரனைகள் அட்டன் நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.ரஜேந்திரன் தலைமையில் இடம் பெற்று சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேதபரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)